அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் - 4000இற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!

#SriLanka #Case #Court #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் - 4000இற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 1998 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டத்தின்படி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 இந்த வழக்குகளில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 ஆபாச படங்களை இடுகையிடுதல், பாலியல் வன்கொடுமை செய்தல், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு அமர்த்துதல் அல்லது பணியமர்த்தல், அவர்களை கொடுமைப்படுத்துதல்,  போன்ற குற்றங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றங்களில்  குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4