கண்டியில் 36இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

#SriLanka #children #kandy #Sexual Abuse #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
6 months ago
கண்டியில் 36இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்தில், மேலும் பலர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கண்டியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பேராதனைப் பகுதியில் தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்யும் பிரதான சந்தேகநபரும், பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகச் சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதோடு, மேலதிக வகுப்புகளை இலக்கு வைத்துச் செயற்பட்டுள்ளனர். சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை இரகசியமாகப் பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள், அந்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, அவர்களைத் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களுடன் மேலும் ஐந்து பேர் தொடர்புடையதாகத் தெரியவந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை பொலிஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

அத்துடன், சந்தேகநபர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவர்கள் இருப்பார்களானால், அவர்கள் குறித்த தகவல்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4