ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பு!

#SriLanka #Namal Rajapaksha #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிற்க இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

 வாக்குமூலம் பதிவு செய்வதற்காக காலை 9.30 மணிக்கு FCID முன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். 

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னர் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் அவர் வெளிநாட்டில் இருந்ததால், அவர் மறு தேதியைக் கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக இன்றைய சம்மன் அனுப்பப்பட்டது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4