சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
#SriLanka
#Arrest
#Court Order
Thamilini
1 hour ago
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) உத்தரவிட்டுள்ளது.
அவர் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு CID-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏர்பஸ் விமான வழக்கில் ஷமிந்திர ராஜபக்ஷ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்