ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராக அழைப்பாணை!

#SriLanka #Notice
Thamilini
6 months ago
ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராக அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 3 ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

 3 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 வாக்குமூலம் அளிப்பதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முன்னதாக 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 அன்றைய தினம் தான் ஆஜராக முடியாது என்றும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வழக்கறிஞர் மூலம் பொலிஸாருக்குத் தெரிவித்திருந்தார்.

 இருப்பினும், மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால், பிப்ரவரி 3 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4