ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு - சேவைகள் தாமதமடையும்!
#SriLanka
#Railway
#Train
Thamilini
1 hour ago
கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான கடற்கரைப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள் இன்று (31) மற்றும் நாளை (01) தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமிக்ஞை அமைப்பை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் தாமதமாகலாம் என்று இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் இலங்கை ரயில்வே வருந்துகிறது என்றும், இந்தக் காலகட்டத்தில் பொதுமக்களின் புரிதலைக் கோருவதாகவும் ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.