போலி விசாவில் ஐரோப்பிய நாட்டிற்கு பயணித்த பங்களாதேஷ் பிரஜை கைது!

#SriLanka #Arrest #Airport #Bangladesh #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
போலி விசாவில் ஐரோப்பிய நாட்டிற்கு பயணித்த பங்களாதேஷ் பிரஜை கைது!

போலி விசாவைப் பயன்படுத்தி ஸ்பெயினுக்குச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (26) காலை BIA இல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் தனது புறப்பாட்டிற்குத் தேவையான ஆவணங்களை கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தார். ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் காரணமாக, அவை மேலதிக பரிசோதனைக்காக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. 

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகளில், சந்தேக நபர் வழங்கிய ஸ்பானிஷ் விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. 

 27 வயதான பங்களாதேஷ் நாட்டவர் ஐரோப்பிய நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ விசா வழங்கும் நிறுவனத்திற்கு  25,000 பங்களாதேஷ் டாக்கா (தோராயமாக ரூ. 63,000) தொகையை செலுத்தி போலி விசாவைப் பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4