குற்றவாளியை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!
#SriLanka
#Police
#Public
#Missing
#Help
Thamilini
2 months ago
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
குறித்த நபர் தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தின் துணையுடன் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸார், கல்கிசைப் பிரிவு குற்ற விசாரணைப் பணியகத்தின் - 071-8596408 தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்