போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 925 பேர் கைது!

#SriLanka #Arrest #drugs #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY
Abi
3 hours ago
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 925 பேர் கைது!

நாடளாவிய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது "ரதம ஏகத" தேசிய பிரச்சாரத்தின் கீழ் 925 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொத்தம் 932 சோதனைகள் நடத்தப்பட்டன. 23 சந்தேக நபர்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டன. மேலும் 2 நபர்கள் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றில் ஹெராயின், ஐஸ், கோகைன், கஞ்சா, கஞ்சா செடிகள், குஷ், போதை மாத்திரைகள், மதனமோதகா மற்றும் மாவா ஆகியவை அடங்கும்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்காக “ரதம ஏகதா” பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!