ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

#SriLanka #Court Order #ravi karunanayake
Thamilini
4 months ago
ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (PTL) உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள் 



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4