திறைசேரி நிர்ணயித்த வருவாய் இலக்கை தாண்டியதாக தபால்துறை அறிவிப்பு!
#SriLanka
#Postal
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இலங்கை தபால் துறை கடந்த ஆண்டு திறைசேரி நிர்ணயித்த வருவாய் இலக்கை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு 13,100 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்ட முடிந்ததாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கை தபால் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தொழில்களுக்கு பல புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் நிரந்தர நியமனங்கள் செய்யப்பட்டதாகவும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்