நிதி மோசடி - முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
நிதி மோசடி - முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜனவரி 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

2014 ஆம் ஆண்டு பிங்கிரியா மற்றும் நாரம்மல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான  6.1 மில்லியனுக்கும் அதிகமான நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குறித்த ஏழுப் பேருக்கும் எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன் விசாரணைக்கு வந்தது. சமர்ப்பிப்புகளை பரிசீலித்த அவர், ஜனவரி 27 ஆம் திகதி விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார். 

 அந்தத் திகதியில் இரண்டு சாட்சிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்புமாறு உயர் நீதிமன்ற நீதிபதி மேலும் உத்தரவிட்டார். 

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4