நுண்நிதி கடன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 days ago
தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராச்சி, நுண்நிதி கடன்களுடன் தொடர்புடைய தொடர்ச்சியான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஒரு புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நுண்நிதி தொடர்பான கடனால் மூழ்கி சுமார் 200 பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த அவர், நெருக்கடி நிலைமையை வலியுறுத்தி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”