03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

#SriLanka #Land_Slide #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
03 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மூன்று மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை இன்று (05) இரவு 10:00 மணி முதல் நாளை (06) பிற்பகல் 1:00 மணி வரை அமலில் இருக்கும். 

 பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை-1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கண்டி மாவட்டம்: உடதும்பர பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் 

 மாத்தளை மாவட்டம்: வில்கமுவ பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

 நுவரெலியா மாவட்டம்: வலப்பனை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4