ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்!

#SriLanka #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்!

நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்களை வரும்   09 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பெர்னாண்டோ அமைச்சராக இருந்த காலத்தில் சதோச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4