விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு பிரஜை - வெலிகமவில் சம்பவம்!
#SriLanka
#Police
#Accident
#Investigation
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
வெலிகம கடற்கரை பகுதியில் நேற்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ஜீப் வண்டி மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தை தொடர்ந்து அவர் வாலனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஜீப்பின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”