தனது 14 வயது மகனை அடித்தே கொலை செய்த தந்தை கைது!

#SriLanka #Investigation #Crime #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
தனது 14 வயது மகனை அடித்தே கொலை செய்த தந்தை கைது!

நூரியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது 14 வயது மகனை கொலை செய்த குற்றத்திற்காக சந்தேகத்தின் அடிப்படையில் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குழந்தையொன்று தாக்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

சிறுவனை பரிசோதனை செய்த மருவத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளைமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 “இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4