தையிட்டி விகாரைக்கு எதிராக களமிறங்கிய விகாராதிபதி; மக்களின் போராட்டத்திற்கும் ஆதரவு!
#SriLanka
#Thaiyiddi
Mayoorikka
2 months ago
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பான பிரச்சினைகளை நாகதீப விகாராதிபதி நேரடியாக சென்று கலந்துரரையாடியுள்ளார்.
குறித்த பகுதிக்கு இன்று சென்ற அவர் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.
அத்துடன் நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு மாகாண பொலிஸார் எந்தவொரு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.