நாட்டின் பொது அவசரகால நிலை நீடிப்பு - வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#Gazette
#StateOfEmergency
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கையில் பொது அவசரகால நிலை இன்று (28) முதல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டம், 1978 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றால் திருத்தப்பட்ட பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டது.
அதன்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தின் விதிகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
