கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆழிப்பேரலையின் நினைவு நாள் அனுஷ்டிப்பு!
#SriLanka
#Kilinochchi
#tsunami
Mayoorikka
3 hours ago
தேசிய பாதுகாப்பு தினமும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவு தினமும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
சுனாமி ஆழிப்பேரலையின் 20 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
தேசியக்கொடி கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. .
இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எஸ்-முரளிதரன் ,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ்மா அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.