அரசாங்கம் கவிழ்வதற்கான அறிகுறிகள் தற்போது தெரிகின்றது: அர்ச்சுனா
#SriLanka
#NPP
#Archuna
Mayoorikka
2 months ago
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் படகில் ஓட்டை விழுந்துள்ளதாகவும் படகு உடைந்து மூழ்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
அரசாங்கம் கவிழ்வதற்கான அறிகுறிகள் தற்போது தெரிவதாகவும் இன்னும் ஒரு வருட காலப்பகுதிக்குள் ஆட்சி கவிழும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வரவு செலவு திட்டம் தோற்கடிப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.