ஆன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Warning
#online
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
பல்வேறு நபர்கள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி நிதி மோசடி செய்ததாக முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதற்கு முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற வேண்டும் என்று SLCERT இன் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்தா தெரிவித்தார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக மோசடிகள் நடப்பது குறித்து கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
