சிங்கப்பூரில் மோசடியாளர்களுக்கு 24 பிரம்படிகள் வழங்க உத்தரவு
#government
#Law
#Singapore
#Fraud
Prasu
3 months ago
சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் 24 பிரம்படிகளை கட்டாயமாக பெறுவார்கள் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நமது குற்றவியல் சட்டங்கள் பயனுள்ளதாகவும், நியாயமாகவும், வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்ப செயல்படுவதையும் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேற்படி சட்டத்தின் கீழ், நிதி மோசடி செய்பவர்கள் 24 பிரம்படிகளையும், மோசடி செய்ய தங்கள் வங்கிக் கணக்கு அல்லது பிற தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்தே வழங்குபவர்கள் 12 பிரம்படிகள் வரையும் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )