வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
18 hours ago
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யும்!

நாட்டின் கிழக்கு பகுதியின் வீசும்  காற்றின் தாக்கம் காரணமாக,  வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

 அதன்படி, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். 

 கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். 

 வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அடுத்த 36 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!