முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வாலாவிற்கு எதிராக NPP அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வாலா தனது முனைவர் பட்டத்தை மோசடி செய்திருந்தால், தேசிய மக்கள் சக்தி (NPP) அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இதுபோன்ற சூழ்நிலையில் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார்.
விரைவில் சான்றிதழைச் சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரன்வாலா கட்சிக்கு உறுதியளித்ததாகவும், ஆனால் இதுவரை அதைச் செய்யவில்லை என்றும் ஜெயதிஸ்ஸ கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
