நாட்டை மீளக் கட்டியெழுப்ப 3.4 பில்லியன் நிதி கிடைத்துள்ளதாக தகவல்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
6 hours ago
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்திற்கு இதுவரை 3,421 மில்லியனுக்கும் அதிகமான தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வணிகர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நிதிக்கு பங்களித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, இதுவரை பெறப்பட்ட மொத்த பணம் 3.4 பில்லியனாகும். இது அமெரிக்க வழங்கிய 11 மில்லியன் டொலருக்கும் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
