இந்தோனேசியாவில் பாரிய தீவிபத்து - 22 பேர் பலி!
#SriLanka
#Accident
#fire
Thamilini
1 hour ago
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகலில் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய கட்டிடங்களுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தீயை அணைக்கும் பயணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருவதாகவும், விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
