ரயில் பருவக்காலச் சீட்டுக்களை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவிப்பு!
#SriLanka
#Train
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில், பருவக்காலச் சீட்டை யார் பயண்படுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
ரயில் சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில் ரயில் பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
