க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு!
#SriLanka
Mayoorikka
51 minutes ago
மீதமுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இதனை தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
