குழந்தைகளை கொன்று சூட்கேசில் மறைத்து வைத்த நியூசிலாந்து பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
#Murder
#Women
#children
#Newzealand
#Prison
Prasu
10 hours ago
நியூசிலாந்தில் இரண்டு குழந்தைகளைக் கொன்று உடல்களை சூட்கேசில் மறைத்து வைத்த பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹக்கியுங் லீ என்ற அந்தப் பெண், தனது கணவர் புற்றுநோயால் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
எட்டு வயதான யூனா ஜோ மற்றும் ஆறு வயதான மினு ஜோ ஆகிய இரண்டு குழந்தைகளே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2018ம் ஆண்டு கணவர் இறந்த மன அழுத்தத்தில் கொலைகளைச் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
(வீடியோ இங்கே )