ஷேக் ஹசீனா குறித்து இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேசம்
#India
#PrimeMinister
#Women
#Letters
#Bangladesh
Prasu
2 hours ago
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி இந்திய அரசுக்கு வங்கதேசம் முறையாக கடிதம் எழுதியுள்ளது.
டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்த பிறகு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்ததாக ஷேக் ஹசீனாவுக்கு கடந்த 17ந்தேதி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆகஸ்ட் 5ந்தேதி ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
(வீடியோ இங்கே )