மீண்டும் கைதாகுவாரா ரணில்? நடிகையின் மாடி வீட்டு ஊழல்
#SriLanka
#Ranil wickremesinghe
Mayoorikka
1 hour ago
நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான இந்த கட்டடம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசாரிக்கப்பட்டு அல்லது கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான இந்த கட்டடம், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதற்கான மாத வாடகை 21 மில்லியன் ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
