கெஹலிய சார்பில் சமர்பிக்கப்பட்ட ரிட் மனுக்கள் தள்ளுபடி!
#SriLanka
#Court Order
#KehaliyaRambukwella
Thamilini
7 hours ago
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்க கொழும்பு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மனுக்களில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுக்களை பரிசீலித்து தள்ளுபடி செய்தது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
