சாவகச்சேரி பொலிஸாரின் அதிரடி! விசேட தேடுதல் வேட்டையில் சிக்கிய நபர்
#SriLanka
Mayoorikka
4 months ago
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவற்குழி பகுதியில் பொறுப்பதிகாரி C.I.கோணேஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உடமையில் 25 கிராம் ஹேரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய நபர் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்று பொருளையும் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பல பகுதிகளில் போதை பொருள் பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து அதனை தடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
