பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!
#SriLanka
Mayoorikka
4 months ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நச்சுப் பொருட்கள் சட்டம் பிரிவு 54(1) இன் கீழ், சந்தேகநபரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க போதுமான திருப்திகரமான காரணங்களை முறைப்பாடு செய்த தரப்பினர் நீதிமன்றத்தில் முன்வைக்காத காரணத்தினால், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
