இன்றைய ராசிபலன் (30.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (30.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரணி: உங்கள் அணுகுமுறையால் நினைத்தை சாதிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.

கார்த்திகை 1: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உடன் பணிபுரிபவர் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.

ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னைகள் முடியும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட தடை விலகும்.

திருவாதிரை: இன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அலைச்சல் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் நீங்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.

கடகம்:

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

பூசம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர்.

ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும்.

சிம்மம்:

மகம்: நினைப்பது நடந்தேறும் நாள். எதிர்ப்பு விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.

பூரம்: இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடியும். துணிச்சலுடன் செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள்.

உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி உண்டாகும். உங்கள் முயற்சி ஆதாயமாகும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

துலாம்:

சித்திரை 3,4: தடைகள் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் தேவைகளை நிறைவேற்றுவீர்.

சுவாதி: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். வருமானம் அதிகரிக்கும்.

விசாகம் 1,2,3: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

அனுஷம்: பிறர் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில், பிறரால் முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்.

கேட்டை: முயற்சியில் ஆதாயம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

தனுசு:

மூலம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

பூராடம்: வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.

உத்திராடம் 1: நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும். பணப்புழக்கம் கூடும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.

திருவோணம்: திட்டமிட்டு செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.

அவிட்டம் 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சதயம்: குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியதாக இருக்கும். செயல்களில் நெருக்கடி ஏற்படும்.

பூரட்டாதி 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் வரும்.

உத்திரட்டாதி: குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!