இன்றைய ராசிபலன் (29.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (29.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். புதிய வேலைகள் இன்று வேண்டாம்.

பரணி: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.

கார்த்திகை 1: குடும்ப நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும்.

ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். பணியாளரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 1,2: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்.

திருவாதிரை: நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். செயலில் நெருக்கடி உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.

கடகம்:

புனர்பூசம் 4: நண்பர்களின் உதவி நன்மை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

பூசம்: வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

சிம்மம்:

மகம்: செல்வாக்கு உயரும். முயற்சிகள் இன்று வெற்றியாகும். வழக்கு சாதகமாகும்.

பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.

உத்திரம் 1: வருமானம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் சிறு தடைகள் தோன்றும்.

அஸ்தம்: குல தெய்வத்தின் அருளால் எடுத்த வேலை நடந்தேறும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

சித்திரை 1,2: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

துலாம்:

சித்திரை 3,4: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வேலைப்பளு அதிகரிக்கும்.

சுவாதி: உங்களது முயற்சி வெற்றியாகும். சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும்

விசாகம் 1,2,3: வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்:

விசாகம் 4: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.

அனுஷம்: உங்கள் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடன்களை அடைப்பீர்.

கேட்டை: எதிர்பார்த்த வருமானம் வரும். முதலீட்டிற்கு ஏற்ப ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

மூலம்: ஆதாயமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

பூராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

உத்திராடம் 1: வேலையில் கவனம் அதிகரிக்கும். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும்.

திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.

அவிட்டம் 1,2: நினைத்ததை அடைய துணிச்சலுடன் செயல்படுவீர் என்றாலும், எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.

சதயம்: புதிய முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.

பூரட்டாதி 1,2,3: வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். புதிய வேலைகள் இன்று வேண்டாம்.

மீனம்:

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வருமானம் கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!