இன்றைய ராசிபலன் (27.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன
மேஷம்:
அசுவினி: யோகமான நாள். நெருக்கடிகள் நீங்கும். பெரியோரின் உதவி கிடைக்கும்.
பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.
கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2, 3, 4: இயந்திர இயக்கத்திலும், வாகனப் பயணத்திலும் எச்சரிக்கை அவசியம்.
ரோகிணி: மனதில் இனம்புரியாத குழப்பமும் பயமும் ஏற்படும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கவனம் தேவைப்படும். உடன் பணிபுரிபவர்களால் சில நெருக்கடி தோன்றும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3, 4: நன்மைகள் அதிகரிக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி புரிவர்.
புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் கவனத்தை அதிகரிப்பீர். வருமானம் திருப்தி தரும்.
கடகம்:
புனர்பூசம் 4: நினைப்பதை நடத்தி முடிக்கும் நாள். இடம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீர்வு உண்டாகும்.
பூசம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
ஆயில்யம்: தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் செல்வாக்கு உயரும்.
சிம்மம்:
மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூரம்: பிறரால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர். பிள்ளைகளால் பெருமை அடைவீர்.
உத்திரம் 1: பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவைப்படும்.
கன்னி:
உத்திரம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும் என்றாலும் முயற்சியில் வெற்றி காண்பீர்.
அஸ்தம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
சித்திரை 1, 2: எடுக்கும் முயற்சி இழுபறியாகும் என்றாலும் நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர்.
துலாம்:
சித்திரை 3, 4: பெரியோர் ஆதரவால் பெருமையடையும் நாள். உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும்.
சுவாதி: முயற்சியால் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும்.
விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்பார்த்த பணம் வரும். தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.
அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
கேட்டை: அலுவலக பிரச்னைகள் முடியும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.
தனுசு:
மூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.
பூராடம்: அலட்சிய மனப்பான்மையை கைவிடுங்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.
உத்திராடம் 1: தொழிலில் இன்று ஓரளவு ஆதாயம் காண்பீர். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
மகரம்:
உத்திராடம் 2, 3, 4: வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
திருவோணம்: புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பதுடன், வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
அவிட்டம் 1, 2: திடீர் செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும்.
கும்பம்:
அவிட்டம் 3, 4: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.
சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். உங்கள் முயற்சி லாபமாகும்.
பூரட்டாதி 1, 2, 3: வியாபார பிரச்னைகளை சரி செய்வீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
மீனம்:
பூரட்டாதி 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த வருவாய் வரும்.
உத்திரட்டாதி: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
ரேவதி: தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.
(வீடியோ இங்கே )