பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் தவிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!
17,000 குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.
அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு குழந்தையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் வடமேற்கு மாகாண சபை உயர்தர சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு வாழ ஏற்ற ஒரு நாட்டை உருவாக்க ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
