இன்றைய ராசிபலன் (25.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
4 hours ago
இன்றைய ராசிபலன் (25.10.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

பரணி: வெளியூர் பயணத்தைத் தவிர்ப்பதும், சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதும் நன்மையாகும்.

கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் கூடும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.

ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாயம் ஏற்படும்.

மிருகசீரிடம் 1,2: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.

திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும்.

புனர்பூசம் 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவர். வரவு அதிகரிக்கும்.

கடகம்:

புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும்.

பூசம்: குடும்பத்தினரால் குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

ஆயில்யம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்:

மகம்: தேவையற்ற பிரச்னைகள் தேடி வரும். அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும்.

பூரம்: சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும்.

உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவிபுரிவர்.

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.

அஸ்தம்: தொழில் முன்னேற்றம் அடையும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் உங்களது முயற்சி ஆதாயமாகும்.

துலாம்:

சித்திரை 3,4: வரவால் வளம் காணும் நாள். முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

சுவாதி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபார பிரச்னைகளை சரி செய்வீர்.

விசாகம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். முயற்சி லாபம் தரும். விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்:

விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வருமானத்தில் தடையுண்டாகும்.

கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் யோசிக்கவும். சிலர் மறைமுகமாக தொல்லை கொடுப்பர்.

தனுசு:

மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் அலைச்சலால் மனம் சோர்வடையும்.

பூராடம்: செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும்.

உத்திராடம் 1: கடன் கொடுத்தவர்களால் நெருக்கடி ஏற்படும். திடீர் செலவால் அவதிக்கு ஆளாவீர்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: லாபமான நாள். எதிர்ப்புகள் தோன்றினாலும் அதை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்.

திருவோணம்: எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: கவனமாக செயல்பட்டு ஆதாயம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும்.

சதயம்: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர். நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்.

பூரட்டாதி 1,2,3: பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்:

பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

ரேவதி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!