நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளின் தரத்தை சரிபார்க்கும் பணி ஆரம்பம்!
#SriLanka
#Bus
#Lanka4
Mayoorikka
10 months ago
நீண்ட தூர பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் பேருந்துகளின் தரம் குறித்து அறிக்கை வெளியிடுவது எதிர்காலத்தில் கட்டாயமாக்கப்படும் என்றும், அது குறித்து விசாரிக்க பயணிகளுக்கு முழு உரிமை உண்டு என்றும் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை கொழும்பு, பஸ்டியன் மாவத்தை பயணிகள் பேருந்து முனையத்தில் இருந்து தொடங்கும் நூறு கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் பேருந்துகளின் தரத்தை சரிபார்க்கும் முன்னோடித் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றபோது தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் இணைந்து தொடங்கிய இந்த முன்னோடித் திட்டத்திற்கு பேரூந்து சங்க முழு ஆதரவும் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
