இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மூன்று இலட்சத்தை கடந்த தங்கம்!
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (8) 3 இலட்சத்தை கடந்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை தரவுகளின் படி, இன்று ஒரேநாளில் மாத்திரம் மூன்று தடவைகள் தங்க விலை அதிகரித்துள்ளது.
நேற்று (07) 290,500 ரூபாவாக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 303,400 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று 314,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 328,000 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை - 22 கரட் ஒரு பவுன் - 296,000
24 கரட் ஒரு பவுன் - 320,000
இன்று முற்பகல் - 22 கரட் ஒரு பவுன் - 299,700
24 கரட் ஒரு பவுன் - 324,000
இன்று பிற்பகல் - 22 கரட் ஒரு பவுன் -303,400
24 கரட் ஒரு பவுன் 328,000
வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் இவ்வாறு தங்க விற்பனை விலை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
(வீடியோ இங்கே )
அனுசரணை
