நாட்டின் இருவேறு பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்துகள் - இருவர் பலி!
#SriLanka
#Train
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
கடுகண்ணாவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் செல்லும் ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரெஸ்ஸவின் கானத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் ரயில் என பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
