எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மலையேறிகள் - 1000 பேர் பனிச்சரிவில் சிக்கியதாக தகவல்!
#SriLanka
#Mountain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
திபெத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கிய சுமார் 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கிட்டத்தட்ட 1,000 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
அவர்களில் 200 க்கும் மேற்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பனிச்சரிவு காரணமாக அந்தப் பகுதிக்குச் செல்லும் சாலைகள் தடைபட்டுள்ளன.
இருப்பினும், சிக்கியுள்ள மீதமுள்ள ஏறுபவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
