வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளி - 12 பேர் மாயம்!
#SriLanka
#Vietnam
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
வியட்நாமைத் தாக்கிய புவாலோய் சூறாவளியின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீனவர்கள் குழு ஒன்று காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக, 28,500 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கூடுதலாக, வியட்நாமில் உள்ள நான்கு விமான நிலையங்களை தற்காலிகமாக மூட அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
