இன்றைய ராசிபலன் (29.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும்.
பரணி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
கார்த்திகை 1: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.
ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.
மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர்.
திருவாதிரை: மூன்றாமிட கேதுவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.
கடகம்:
புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். ஆறாமிட சந்திரனால் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
பூசம்: உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும்.
சிம்மம்:
மகம்: நம்பிக்கை அதிகரிக்கும் நாள். குருப் பார்வைகளால் எடுத்த வேலைகள் முடியும்.
பூரம்: உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். தொழிலில் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.
உத்திரம் 1: பூர்வீக சொத்து பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் சிறு சங்கடங்கள் தோன்றும்.
அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத ஆதித்ய யோகத்தால் எதிர்பார்த்த பணம் வரும்.
சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை ஏற்படுத்தும். உடலும் மனமும் சோர்வடையும்.
துலாம்:
சித்திரை 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.
சுவாதி: சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். உழைப்பாளர்களின் நிலை உயரும்.
விருச்சிகம்:
விசாகம் 4: நினைப்பது நடந்தேறும் நாள். வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகள் முடியும்.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.
கேட்டை: கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
தனுசு:
மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் சொந்த பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம்.
பூராடம்: உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். எந்த ஒன்றிலும் கவனம் செலுத்த முடியாமல் சங்கடப்படுவீர்.
உத்திராடம் 1: வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணமும், புதிய முயற்சிகளும் வேண்டாம்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனம் பழுதாகி உங்களை சங்கடப்படுத்தும்.
திருவோணம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
அவிட்டம் 1,2: எச்சரிக்கையாக செயல்படுங்கள். அவசர வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: ஆதாயமான நாள். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.
சதயம்: தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: நண்பர்களின் உதவியால் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
மீனம்:
பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.
உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
ரேவதி: உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.
(வீடியோ இங்கே )



