மேல் மாகாணத்தில் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!
#SriLanka
#Gold
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
10 months ago
கணேமுல்ல பகுதியில் நபர் ஒருவரை தாக்கி சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட, மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கிரிபத்கொட பகுதியில் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் 17 மற்றும் 20 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கெண்டலியத்தபலுவ, கணேமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
121 கிராம் 350 மில்லிகிராம் நிறைவுடைய திருடப்பட்ட தங்கப் பொருட்களும், 17 கிராம் 15 மில்லிகிராம் நிறைவுடைய இரண்டு தங்கத் துண்டுகளும் அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
