பலத்த மழை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 weeks ago
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
