இன்றைய ராசிபலன் (22.09.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: நன்மையான நாள். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.
பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். வியாபார போட்டியாளர் விலகுவர்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: போட்டிகளை சந்திக்கும் நாள். செயல்களில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.
ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர்.
மிருகசீரிடம் 1,2: பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்.
திருவாதிரை: திடீர் வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் சோர்வடையும்.
புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.
கடகம்:
புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.
பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்.
ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையில் போராடி வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்:
மகம்: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.
பூரம்: வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.
உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் தேவையை நிறைவேற்றுவீர்.
கன்னி:
உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சிகள் இன்று இழுபறியாகும்.
அஸ்தம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
சித்திரை 1,2: செயல்களில் சங்கடம் உண்டாகும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.
துலாம்:
சித்திரை 3,4: வரவு செலவில் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது அவசியம்.
சுவாதி: வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். விரய சந்திரனால் அலைச்சல் அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பணியில் கூடுதல் கவனம் தேவை.
அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கேட்டை: உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.
தனுசு:
மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
பூராடம்: வியாபாரத் தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் தோன்றிய பிரச்னைகளை பேசித்தீர்ப்பீர்கள்.
உத்திராடம் 1: வருமானத்திற்கான முயற்சிகள் வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர்.
அவிட்டம் 1,2: உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும்.
சதயம்: உழைப்பு அதிகரிக்கும். சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒன்றிலும் இன்று அவசரம் வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். வாக்கு வாதங்களைத் தவிருங்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். கவனமாக செயல்படுவதால் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
உத்திரட்டாதி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலையை முடிப்பீர்.
ரேவதி: எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கூடும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
(வீடியோ இங்கே )



