ராஜபக்சர்களிற்கு இனி காலமில்லை! பிமல் ரத்நாயக்க

மக்கள் யாரும் இனிமேல் ராஜபக்சர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கமாட்டார்கள். மக்கள் பைத்தியக்காரர்கள் இல்லை.
இந்த ஆட்சியை கவிழ்க்க போவதாக சொல்கிறார்கள். இந்த அநுர அரசாங்கத்தை கவிழ்க்க அதைவிட ஒரு நல்ல ஆட்சி வர வேண்டுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தெற்கில் ஆட்சி மாற்றம் தொடர்பில் பரபரப்பான கதைகள் பேசப்பட்டுவருகின்றது.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளை உள்ளே தள்ள அனுர அரசு முற்பட்டுள்ளர்து.
இந்நிலையில் ரணில் மீது மத்திய வங்கியை கொள்ளை அடித்தது தொடர்பான பாரிய குற்றச்சாட்டு இருப்பதாகவும் அதை பற்றி தெரிந்தாலும் சஜித் எதுவும் கூற மாட்டார் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஐஸ்லாந்தில் தான் ஜனாதிபதியாக போவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக போவதாக இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நான் அவர் எங்கே ஜனாதிபதியாக போகிறார் என்று யோசித்த போது தெரியவந்தது அவர் ஐஸ்லாந்தில் தான் ஜனாதிபதியாக போகிறார் எனவும் நையாண்டி செய்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



